சேலத்தில் பொருட்காட்சி நாளையுடன் நிறைவு

சேலத்தில் பொருட்காட்சி நாளையுடன் நிறைவு

சேலத்தில் பொருட்காட்சி நாளையுடன் நிறைவு

புதிய பேருந்து நிலையத்தில் நடந்து வரும் பொருட்காட்சி நாளையுடன் நிறைவு என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் புதிய பஸ் நிலையம் எம்.கே.சி. என்டர்டைமென்ட் நடத்தும் ரோபோட்டிக் காட்டு விலங்குகளின் அட்டகாசம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி உள்ளிட்ட பொருட்காட்சி நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிட்டி பாபு, கனகராஜ், செந்தில்குமார், பாண்டியராஜன் ஆகியோர் கூறுகையில், சேலத்திலேயே பொருட்காட்சியில் ரோபோட்டிக் சிங்கம், புலி, கரடி, மான், ஒட்டகம், யானை போன்ற காட்டு விலங்குகளின் அட்டகாசம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. செயற்கையாக வடிவமைத்து உள்ளனர். பொதுமக்கள் கண்களை கவரும் விதமாக மின்விளக்குகளால் ஒளிர வைத்து வடிவமைத்துள்ளனர். இதைதொடர்ந்து கண்காட்சிக்கு வருபவர்கள் வீட்டு உபயோக பொருட்கள், நுகர்வோர் ஸ்டால், அங்காடி பொருட்களை ஷாப்பிங் செய்து மகிழ்ந்தனர். பொழுதுபோக்கு பூங்காக்களில் பெரியோர்களுக்கும், சிறுவர்களுக்கான விளையாட்டுகளை பிரத்யேகமான ராட்டினங்களில் ஏறி விளையாடினார்கள். எண்ணற்ற உணவு தின்பண்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு வகையான பொருட்கள் அனைத்தும் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது, இந்த பொருட்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது என்றனர்.

Tags

Next Story