ஏரியில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் கண்கள் தானம்

ஏரியில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் கண்கள் தானம்

மாணவர் சிபு 

ஸ்ரீபெரும்புதுார் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, பட்டனுால் சத்திரத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன், 40. இவரது மகன் சிபு, 16, தெரேசாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், அவர், நேற்று முன்தினம் மாலை, தம்பி சிபி, 14, மற்றும் நண்பர்கள் பிரவீன், 14, மகிலேஷ், 14 ஆகியோரு டன் ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் குளிக்க சென்றார். நான்கு பேரும் ஏரியில் குளித்தபோது, சிபு எதிர் பாராத விதமாக நீரில் மூழ்கி சிபு உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத்துறை வீரர்கள், சிபுவின் உடலை மீட்டனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக,ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிபுவின் தந்தை பத்மநாபன், தன் மகனின் கண்களை தானம் அளிக்க முன்வந்ததை அடுத்து, தனியார் மருத்துவமனை கண் வங்கி ஊழியர்கள் கண்களை நேற்று பெற்றனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் முன், கண் தானம்செய்ததற்கான சான்றிதழை பத்மநாபனிடம் வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story