கீழே விழுந்த விவசாயி பரிதாப பலி

கீழே விழுந்த விவசாயி பரிதாப பலி
விவசாயி பலி
கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அருகே உர மூட்டையை துாக்கிச் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 53; விவசாயி. இவர், கடந்த 12ம் தேதி காலை 10:00 மணி அளவில் தனது நிலத்திற்கு உரம் போடுவதற்காக உர மூட்டையை துாக்கிச் சென்றார். அப்போது, வரப்பு தடுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்த அவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story