மகளிடம் பாலியல் சேட்டை செய்த தந்தை

மகளிடம் பாலியல் சேட்டை செய்த தந்தை

 மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி கணவன் மீது தாடிக்கொம்பை சேர்ந்த மனைவி புகார் அளித்துள்ளார்.

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி கணவன் மீது தாடிக்கொம்பை சேர்ந்த மனைவி புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் செல்வ முருகன். திருமணமான இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் வயதிற்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது இளைய மகள் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியாக இல்லாமல் அவதிப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் வந்த தந்தை செல்வ முருகன் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் இது தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் .

Tags

Next Story