எருது விடும் திருவிழா; வீரர்கள் உற்சாகம்

எருது விடும் திருவிழா; வீரர்கள் உற்சாகம்

நாட்றம்பள்ளி அருகே நடந்த எருது விடும் திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன.  

நாட்றம்பள்ளி அருகே நடந்த எருது விடும் திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பூசாரியூர் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட காளைகள் மந்தையில் சீறிப்பாய்ந்தன- காளையர் கள் உற்சாகம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா, ஜங்காளபுரம் பூசாரியூர் கிராமத்தில் மாபெரும் எருதுவிடும் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்றது. திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடின.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 1.52 லட்சமும், இரண்டாவது பரிசாக 1 லட்சமும், மூன்றாவது பரிசு 80000 உட்பட மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டது. திருவிழாவில் சுமார் 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர். இந்த எருது விடும் திருவிழாவிற்கு வருவாய் துறை வட்டாட்சியர் கோட்டாட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அனுமதி கொடுத்தனர் மற்றும் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற இளைஞர்கள் சுமார் 25 பேருக்கு லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று சென்றனர். வாணியம்பாடி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story