பரவி வரும் காட்டுத்தீயால் தீயணைப்புப் துறையினர் தவிப்பு !

பரவி வரும் காட்டுத்தீயால் தீயணைப்புப் துறையினர் தவிப்பு !

தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயால் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அழிந்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் காட்டுத்தீ மீண்டும் பரவியது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த வெயிலின் கொடுமை தாங்காமல் புல் பூண்டுகள் அனைத்தும் கருகி வருகின்றன. இந்நிலையில் காட்டு தீ அடிக்கடி பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தீயணைப்புத் துறையினரின் உதவியும் நாடியுள்ளனர். இரவு நேரம் என்பதாலும், காற்று வேகமாக வீசி வருவதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்த தீயால் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அழிந்து வருகின்றன.

Tags

Next Story