கிணற்றில் தவறி விழுந்த மயிலை மீட்ட தீயணைப்பு துறையினர்

கிணற்றில் தவறி விழுந்த மயிலை மீட்ட தீயணைப்பு துறையினர்

மீட்கப்பட்ட மயில்


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குமந்தபுரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் 80 அடி ஆழ கிணற்றில் நேற்று மயில் விழுந்து விட்டதாக இதைக் கண்ட விவசாயி கடையநல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மயிலை அதிரடியாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் தீயணைப்புத்துறையினரை வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story