அட்டகாசம் செய்த குரங்குகளை பிடித்த வனத்துறையினர்

அட்டகாசம் செய்த குரங்குகளை பிடித்த வனத்துறையினர்

பிடிபட்ட குரங்குகளுடன் வனத்துறையினர் 

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் அட்டகாசம் செய்த 2 குரங்குகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களில் மந்தி மற்றும் வெள்ளை குரங்கு ஆகியவை 3 பேரை கடித்து காயப்படுத்தியது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் நேற்று குரங்குகளை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story