பாம்பை கொன்று வீடியோ பதிவு வாலிபரை மடக்கியது வனத்துறை

பாம்பை கொன்று வீடியோ பதிவு வாலிபரை மடக்கியது வனத்துறை

கோப்பு படம் 

கந்தர்வகோட்டை அருகே பாம்பை கொன்று வீடியோ பதிவு வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கீரனூர் மலையாண்டி நகரை சேர்ந்தவர் அழகன் மகன் மெய்ஞான செந்தில்குமார் (28) இவர் கடந்த மாதம் 30ம் தேதி பெரியகுளம் பகுதி யில் உள்ள வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள பாம்பை அடித்துக்கொன்று குளக்கரையில் துாக்கி வீசினார்.

இதை செல்போனில் வீடியோ எடுத்து கொடூரமாக வசனம் பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதையறிந்த புதுகை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் இதுபற்றி விசாரணை நடத்துமாறு கீரனுார் வனச்சரக ஊழியர்களுக்கு உத் தரவிட்டார்.

அதன்பேரில் வனச்சரக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பாம்பை அடித்து கொன்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட மெய்ஞான செந்தில்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story