அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்

அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்

ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் 

புதுக்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் முன்னாள் அமைச்சர் செய்தார்.

புதுக்கோட்டையில் நாளை பாரத ரத்னா டாக்டர். புரட்சித்தலைவரின் 107 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர். சி. விஜயபாஸ்கர் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் பாரத் ரத்னா டாக்டர். எம்ஜிஆரின் 107 பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக சார்பில் பொது கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அந்த பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு எம்ஜிஆர் புகழைப் பற்றியும், அவர் ஏழைகளுக்கு செய்த உதவி பற்றியும் அதிமுக ஆட்சி காலத்தில் பொதுமக்கள் என்னென்ன பயன் பெற்றார்கள் என்பது குறித்தும் விளக்க கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் நாளை புதுக்கோட்டை திலகர் திடலில் அதிமுக சிறப்பு பேச்சாளரான கழக நட்சத்திர பேச்சாளர் திரைப்பட நடிகை செல்வி. விந்தியா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். அந்த பொதுக் கூட்டத்தில் காண ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

அந்த பணிகள் எவ்வாறு நடைபெறுவது என்பது குறித்து தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான டாக்டர் .சி. விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி, ஓன்றிய செயலாளர்கள் பொறுப்பாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story