தேர்தலில் பணியாற்றிய அதிமுகவினருக்கு நன்றி

தேர்தலில் பணியாற்றிய அதிமுகவினருக்கு நன்றி

தேர்தலில் பணியாற்றிய அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.


தேர்தலில் பணியாற்றிய அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட கழகத்தின் திருவெரம்பூர், ஸ்ரீரங்கம்,திருச்சி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் கருப்பையா, மண்ணச்சநல்லூர், துறையூர்,முசிறி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் சந்திரமோகன் ஆகியோருக்கு இரட்டைஇலை சின்னத்ததிற்கு தேர்தல் பிரச்சாரம் துவங்கிய முதல் வாக்குப்பதிவு வரை மிகச் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களுக்கும், செயல்வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும், தேமுதிக, SDPI, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும்,பேச்சாளர்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும், மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், வாக்களித்த வாக்காள பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் ,முன்னால் அமைச்சருமான மு.பரஞ்சோதி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story