பிரச்சார வாகனத்திலேயே தூங்கி வழிந்த முன்னாள் அமைச்சர்

பழனியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிரச்சார வாகனத்திலேயே தூங்கி வழிந்தார்.
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இன்று அதிமுக தொண்டர்கள் புடைசூழ பழனி மலை அடிவாரம், சன்னதி வீதி, பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், தேரடி உள்ளிட்ட பழனி நகரின் முக்கிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. தேரடி பகுதியில் பிரச்சாரம் சென்றபோது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலைக்கு முகமது முபாரக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அடிவாரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது நகர மன்ற உறுப்பினர்களின் பெயர்களை கூறி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கு கட்சி நிர்வாகிகளின் பெயர்களை மட்டும் தெரிவித்தால் போதும் என சிலர் கூறியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே பிரச்சார வேனில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடும் வெயில் காரணமாக சோர்ந்தபடி காணப்பட்டார். அவர் பிரச்சார வாகனத்தின் பின்புறம் அமர்ந்த நிலையிலேயே உறங்கியபடி வந்தது, கூட்டணி கட்சியினர் இடையே சுணக்கத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story