சாலையில் பற்றி எரிந்த அரசு பேருந்தால் பரபரப்பு

சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கோவை நோக்கி பயணித்த அரசு பேருந்து கருமத்தம்பட்டி தெக்கலூர் எலச்சிபாளையம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியதையடுத்து ஓட்டுனர் பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார். இதனையடுத்து பயணிகள் அனைவரும் பேருத்தில் இறங்கிய நிலையில் புகை கிளம்பிய பகுதியில் தீ பற்றி எரிந்து மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிய துவங்கியது.

இதனையடுத்து தீயணைப்புதுறைக்கு தகவல் அளிக்கபட்டதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த சூலூர் தீயணைப்புதுறையினர் தீயை கட்டுபடுத்தும் மயற்சியில் ஈடுபட்டனர்.இருப்பினும் கொளுந்து விட்டு எதிந்த தீயில் பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புகூடாக காட்சியளித்தது.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.புகை கிளம்பியதும் சாதுர்தமாக வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளை இறக்கி விட்டதால் இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக பயணிகளுக்கு எந்த பாத்கிப்பும் ஏற்படவில்லை.

Tags

Next Story