திருமண விழாவில் ட்ரம்ஸ் இசைக்கலைஞராக மாறிய மணமகன் !!!

திருமண விழாவில் ட்ரம்ஸ் இசைக்கலைஞராக மாறிய மணமகன் !!!

மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் ட்ரம்ஸ் இசைக்கலைஞராக மாறிய மணமகனை பார்த்து மணமகள் வியப்படைந்தார்.


மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் ட்ரம்ஸ் இசைக்கலைஞராக மாறிய மணமகனை பார்த்து மணமகள் வியப்படைந்தார்.

திருமண விழாவில் ட்ரம்ஸ் இசைக்கலைஞராக மாறிய மணமகன் !!! வியப்படைந்த மணமகள் - மதுரையில் திருமண விழாவில் நடந்தேறிய சுவாரஸ்யம். மதுரை கிரைம்பிரான்ஞ்ச் பகுதியை சேர்ந்த பட்டதாரிகளான மகேஷ்குமார் மற்றும் யுவராணி திருமண ஜோடிக்கு இன்று மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு மணமகன் மணமகளுக்கு திருமாங்கல்யம் அணிவித்த பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது திருமண விழாவில் இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது இந்த நிலையில் திடீரென மனக்குளத்தில் இருந்த மணமகன் மாலையுடன் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து இசை கச்சேரி நடைபெற்ற பகுதிக்கு சென்று டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார்.

இதனை பார்த்து வியப்படைந்த மணப்பெண் அதே மணக்கோலத்தில் இசைக்கச்சேரி மேடைக்கு சென்று ட்ரம்ஸ் வாசித்துக்கொண்டிருந்த மணமகன் அருகே நின்றபடி வாழத்து தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தார். மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் மனக்கோலத்தில் ட்ரம்ஸ் இசைத்த சுவாரசிய சம்பவத்தினை திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் பார்த்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story