திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த விபரீதம் !

திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த விபரீதம் !

பலி

பெண்ணை அறிவாளால் வெட்டி கொலை செய்த காவலாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மதுக்கரை-சுந்தராபுரம் சாலை முத்து வேலப்பகவுண்டர் லைன் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்.இவரது மனைவி வசந்தகுமாரி (42). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வசந்தகுமாரியின் கணவர் செல்வகுமார் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் வசந்தகுமாரி தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.மேலும் அவர் சுந்தராபுரம் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வசந்தகுமாரியின் வீட்டின் அருகே மதுக்கரை அரிசிபாளையத்தை சேர்ந்த பேச்சிமுத்து (64) என்பவர் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வசந்தகுமாரி வேறு நபர்களுடன் செல்போனில் பேசி வருவதாக எண்ணி பேச்சிமுத்து அடிக்கடி வசந்தகுமாரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு இருவரும் வீட்டில் இருந்தபோது 12 மணி அளவில் பேச்சிமுத்து வசந்தகுமாரியிடம் இது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து அங்கிருந்த அரிவாளை எடுத்து வசந்தகுமாரி பின்தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார்.தாயின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மகன் பார்த்தபோது வீட்டின் கதவு தாளிடப்பட்டிருந்த நிலையில் கதவு வழியாக ரத்தம் வெளியேறி உள்ளது. நீண்ட நேரம் கதவை தட்டிய நிலையில் கையில் அரிவாளுடன் வெளியே வந்த பேச்சிமுத்து வசந்தகுமாரியை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் வசந்தகுமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவலாளி பேச்சிமுத்துவை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story