வைக்கோல் தீப்பற்றி எரிந்து நாசம் !

வைக்கோல் தீப்பற்றி எரிந்து நாசம் !

 வைக்கோல்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே ரூ.2 லட்த்து 50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீப்பற்றி எரிந்து நாசம் அடைந்துள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே ரூ.2 லட்த்து 50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீப்பற்றி எரிந்து நாசம். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலபூதனூர் சுந்தர விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் விவசாயி.இவர் தனக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்து வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 4500 வைக்கோல் கட்டுகளை தனது வீட்டுக்குப் பின்னால் உள்ள தகர கொட்டகையில் அடுக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் திடீரென வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்துள்ளது.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் திருமருகல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் பெயரில் திருமருகல் மற்றும் நாகப்பட்டினம் தீயணைப்பு வாகனங்கள் வந்து இரவு முழுவதும் தீயினை அணைக்க முயன்றனர்.ஆனால் தீ மளமளவென பரவி 4500 வைக்கோல் கட்டுகளும் தீயில் எரிந்து நாசமானது.இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி,ஒன்றிய குழு உறுப்பினர் இளஞ்செழியன்,கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story