குப்பைக்கு வைத்த தீயால் குடிசை சாம்பல்!

குப்பைக்கு வைத்த தீயால் குடிசை சாம்பல்!

பொன்னமராவதி பொன் புதுப்பட்டி காலி மனையில் கிடந்த குப்பைக்கு வைத்த தீ பரவியதில், அருகிலுள்ள குடிசை வீடு பற்றி எரிந்தது.

பொன்னமராவதி பொன் புதுப்பட்டி காலி மனையில் கிடந்த குப்பைக்கு வைத்த தீ பரவியதில், அருகிலுள்ள குடிசை வீடு பற்றி எரிந்தது.
பொன்னமராவதி பொன் புதுப்பட்டி பாண்டிமான் கோவில் வீதியில் வசிப்பவர் நாகராஜன். நாகராஜன் வேலைக்கு சென்றுவிட, அவரது மனைவி மற்றும் மகன்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டின் அருகே காலி மனையில் கிடந்த குப்பைக்கு சிலர் தீ வைத்தனர். காற்றின் காரணமாக தீப்பொறி பறந்து அருகில் இருந்த நாகராஜன் குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு தீப்பற்றி எரிந்தது. வீட்டுக்கு வந்த நாகராஜன் மனைவி இதை பார்த்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்ததும் பொன்னமராவதி தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.ஆனால், அதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த டிவி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள். உடமைகள் என்று ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story