மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவரும் தற்கொலை

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவரும் தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட தம்பதி

பெரம்பலூர் மாவட்டம், கொளப்பாடி கிராமத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் வயது -60, இவரது மனைவி சோலையம்மாள் வயது.54, இவர்களுக்கு பழனிவேல், சக்திவேல் எனஇரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சோலையம்மாள் குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இதற்காக இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தும் நோய் குணமாகவில்லை.

இதனால் மணமடைந்த சோலையம்மாள் மே 1ம் தேதி இரவு விஷம் குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மே- 2ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற்றுக் கொள்வதற்காக உறவினர்கள் அனைவரும் குன்னம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் வந்த நடராஜன் வழியிலேயே உறவினர்களை விட்டு பிரிந்து சென்று ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை வீட்டின் அருகே குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

அவ்வழியே வந்தவர்கள் விசாரித்த போது விஷம் குடித்த தகவல் தெரிந்தது. இதனையடுத்து நடராஜனையும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நடராஜன் - சோலையம்மாள் ஆகிய இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வந்த உறவினர்கள் மே3ம் தேதி மாலை கணவன், மனைவி இருவரையும் சேர்த்தே அடக்கம் செய்தனர். இதனால் கொளப்பாடி கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது. சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story