மனைவியுடன் பழகியதை கண்டித்த கணவர் அடித்து கொலை

மனைவியுடன் பழகியதை கண்டித்த கணவர் அடித்து கொலை

கொலை

ஒரகடத்தில், மனைவியுடன் நெருங்கி பழகிய வந்த நண்பரை கண்டித்ததால், கணவரை கட்டையால் அடித்து கொலை செய்த, சகோதரர்கள் இருவரை போலீசார் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், மனைவியுடன் நெருங்கி பழகிய வந்த நண்பரை கண்டித்ததால், கணவரை கட்டையால் அடித்து கொலை செய்த, சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த, பனையூரைச் சேர்ந்தவர் ரவி, 40; மேஸ்திரி. இவரது மனைவி மணிமேகலை, 35. இவர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ரவியும், ஒரகடத்தில் பானிபூரி கடை நடத்தி வரும் திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரும் நண்பர்கள். இதனால், மணிகண்டன், பனையூரில் உள்ள ரவி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, ரவியின் மனைவி மணிமேகலைக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியதுடன், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையறிந்த ரவி, மணிகண்டனை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்ககும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம், இரவு 11:00 மணிக்கு, ஒரகடம் வந்த ரவி, மணிகண்டன் கடைக்கு சென்று, மனைவியுடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என, அவரை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. மணிகண்டனுக்கு ஆதரவாக, அவரது தம்பி கோபியும் வந்து, அங்கு கிடந்த கட்டையால் ரவியை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், ரவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின்படி அங்கு வந்த ஒரகடம் போலீசார், ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, மணிகண்டன், 35, கோபி, 27, ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags

Next Story