காதல் மனைவியை தாலியை பிடுங்கி வெளியே அனுப்பிய கணவன்

காதல் மனைவியை தாலியை பிடுங்கி வெளியே அனுப்பிய கணவன்
தற்கொலை முயற்சி செய்த மனைவி

.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகள் மாரீஸ்வரி ( 20) இவர் நெற்கட்டும் சேவல் பகுதியைச் சேர்ந்த முருகன் முருகேஸ்வரி தம்பதியின் (இருவரும் இறந்துவிட்டனர்) மகன் சசிகுமார் ( வயது 20) இவர்கள் இருவரும் சோழபுரம் ஜோதி மேல்நிலைப் பள்ளிகள் 12 ஆம் வகுப்பு படித்து உள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கிளாஸ் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது இந்த நிலையில் மாரீஸ்வரி தனியார் நூற்பு ஆலையில் வேலை பார்த்து வருகிறார் சசிகுமார் ராஜபாளையத்தில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் இருவரும் கடந்த 15 ஆம் தேதி கொடைக்கானல் சென்று திருமணம் செய்துள்ளனர் சசிகுமாரின் தாய் தகப்பன் இறந்த நிலையில் சசிகுமார் தங்கள் சித்தி வீட்டில் தங்க வந்துள்ளார்கள்.

இருவரும் கொடைக்கானல் சென்று திருமணம் செய்து கொண்டு தனது சித்தி வீடு நெற்கட்டும் செவலில் உள்ளது அங்கு சென்றுள்ளனர் ஒரு நாள் இருவரையும் வீட்டில் வைத்திருந்த சித்தி மாரியம்மாள் மற்றும் கனகராஜ் இருவரும் மறுநாள் காலையில் மாரீஸ்வரியின் கழுத்தில் உள்ள தாலியை பிடுங்கிக் கொண்டு வீட்டை விட்டு சசிகுமாரின் சித்தி மாரியம்மாள் அனுப்பி உள்ளார் இதில் மனம் உடைந்த மாரீஸ்வரி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் மாரீஸ்வரியின் தகப்பனார் கண்ணன் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாரீஸ்வரி கூறும்பொழுது நாங்கள் இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் இருப்பினும் சசிகுமாரின் சித்தி எங்களை சேரவிடாமல் தடுக்கிறார் என்னையும் சசிகுமாரையும் சேர்த்து வைக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags

Next Story