நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!

வருமான வரி சோதனை

குடியாத்தம் தாழையாத்தம் பஜார் மற்றும் சந்தைப்பேட்டை பஜாரில் உள்ள இரண்டு நகை கடைகளில் வருமான வரி சோதனை - பரபரப்பு
குடியாத்தம் தாழையாத்தம் பஜார் மற்றும் சந்தப்பேட்டை பஜாரில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் வந்து நகைகளை வாங்கி செல்கின்றனர். தினந்தோறும் பல லட்சம் ரூபாய்க்கு தங்க நகைகள் வியாபாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையிலும் சந்தப்பேட்டை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையிலும் திடீரென வருமானவரித்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்றது.2 நகைக்கடைகளில் சோதனை நடைபெற்று கொண்டிருந்தபோது ஒரு கடையில் வழக்கம் போல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மற்றொரு கடையில் கதவுகள் மூடப்பட்டு உள்ளே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நகைக்கடையை சேர்ந்த சிலர் கூறுகையில் மார்ச் மாதம் வழக்கமான வருமான வரி சோதனை நடைபெறுவது வழக்கம் என்றனர்.இதனால் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story