பச்சிளங்குழந்தை மா்மச்சாவு

பச்சிளங்குழந்தை மா்மச்சாவு

திருச்சியில் 6 மாத குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


திருச்சியில் 6 மாத குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருச்சி பொன்மலைப்ட்டி, நேருஜிநகா் ரைஸ்மில் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்காதா் - அஸ்மிதா தம்பதியா். இவா்களது 6 மாத ஆண் குழந்தை முகமது கைப். திங்கள்கிழமை காலை தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு பாலூட்டுவதற்காக தாயாா் அஸ்மிதா குழந்தையைத் தூக்கியுள்ளாா். அப்போது குழந்தை சுயநினைவின்றி மூா்ச்சையாகி துவண்டு கிடந்தது தெரியவந்தது. பதறிப்போன பெற்றோா் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

Tags

Next Story