இரு கிராமத்தினரிடையே பிரச்சினை காவல்துறையினர் குவிப்பு

இரு கிராமத்தினரிடையே  பிரச்சினை காவல்துறையினர் குவிப்பு

கோவில் பூசாரியாக செயல்படுவதில் இரு கிராமங்களுக்கு இடையே தகராறு

கோவில் பூசாரியாக செயல்படுவதில் இரு கிராமங்களுக்கு இடையே தகராறு
நத்தம் செந்துறை அருகே சுவாமி கும்பிடுவதில் இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் போலீசார் குவிக்கப்பட்டனர்.நத்தம் அருகே செந்துறை ஊராட்சியில் உள்ளது களத்துப்பட்டி, கோவில்பட்டி கிராமங்கள். இங்கு முடிமலை ஆண்டவர் சுவாமி கோயில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுடன் புரவி எடுப்பு திருவிழா கொண்டாடினர். இந்நிலையில் கோவில்பட்டி கிராம மக்கள்நீதிமன்ற அனுமதியுடன் நேற்று (டிச.7) திருவிழா கொண்டாட தயாராகினர். திருவிழாவில் கோயில் பூஜாரியாக நாங்கள் தான் செயல்படுவோம் என களத்துபட்டி கிராம மக்கள் கூறினர்.கோவில்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க இரு கிராமத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டது. வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story