சேவியர்குமார் கொலை : உடற்கல்வி ஆசிரியருக்கு 2 நாள் காவல்

சேவியர்குமார் கொலை : உடற்கல்வி ஆசிரியருக்கு 2 நாள் காவல்
இரணியல் நீதிமன்றத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஆஜர்படுத்தபட்டார்
சேவியர்குமார் கொலை வழக்கில் தானாக நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி. மனுவை விசாரித்த நீதிபதி இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
குமரி மாவட்டம் மயிலோடு அரசு போக்குவரத்து மெக்கானிக்கல் சேவியர் குமார் கொலை வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சோனிஷ் (எ)அபிலாஸ் (36) இவர் கடந்த 5ம் தேதி தக்கலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 7 தேதி அன்று இரணியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார் அதன் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோனிஷ் (எ) அபிலாஸை இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன்பின் இரணியல் காவல்துறை ஆய்வாளர் பத்மாவதி இரணியல் நீதிமன்றத்தில் சோனிசை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story