கொலை குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்த நீதிபதி

கொலை குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்த நீதிபதி

செல்வம்

வேலூரில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2022ம் ஆண்டு ராமன் என்பவரை செல்வம் கொலை செய்தார். இந்த வழக்கில் செல்வம் நீதிமன்ற காவலில் வேலூர் சிறையில் இருந்து வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் நடந்து வந்தது. வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று (18.03.2024) மாலை நடந்தது. அப்போது குற்றம் நிரூபணம் ஆனதால் குற்றவாளி செல்வத்திற்கு ஆயுள் தண்டனையுடன் ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதம் கட்ட தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

Tags

Next Story