ஒரு நாள் மழைக்கே சகதியான காஞ்சி சாலை

ஒரு நாள் மழைக்கே சகதியான காஞ்சி சாலை

காஞ்சியில் சாதாரண மழைக்கே, சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி, சகதி நீராக மாறியுள்ளது.


காஞ்சியில் சாதாரண மழைக்கே, சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி, சகதி நீராக மாறியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை குறுக்கு சாலியர் தெருவில், 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் முறையான வடிகால்வாய் வசதி இல்லாததால், நேற்று முன்தினம் பெய்த சாதாரண மழைக்கே, சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி, சகதி நீராக மாறியுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைப்பதோடு, மழைநீர் தேங்காமல் முறைக்க வடிகால் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story