சிறுமியை பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி கைது!

சிறுமியை பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி  கைது!

கோப்பு படம் 

சிறுமியை பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.கோவையில் வசித்து வரும் நெருங்கிய உறவினர் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதின் காரணமாக பெற்றோருடன் கோவைக்கு வந்து விட்டனர்.

கூலித் தொழில் செய்து வரும் உறவினரின் மகன் சிறுமியை காதலித்து வந்த நிலையில் சிறுமியை தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்ததால் மாணவி கர்ப்பமடைந்ததுள்ளார்.

இதுகுறித்து தெரியவர இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்து வைத்துள்ளனர்.சிறுமி எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளது குறித்து குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்துபோது கிடைக்க பெற்ற தகவல் உறுதியானதை தொடர்ந்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்த குடும்ப நடத்தி வந்த கூலித் தொழிலாளி முத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story