ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மவுன அஞ்சலி !

ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மவுன அஞ்சலி !

விடுதலை சிறுத்தைகள் கட்சி

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரியில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்திற்கு வி.சி.க வினர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் தியாகு தலைமை வகித்தார். ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் கனியமுதன். மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் நூர் முகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி திராவிடராசா, ஒன்றிய செயலாளர்கள் கனகமுட்லு மாதையன், சசிக்குமார், அருண், ரகு, நிர்வாகிகள் கணபதி, மணிவண்ணன், சிவக்குமார், இந்திரகுமார், விக்ரம், சக்தி, புலிவளவன், சரவணன், மாது, வெங்கடேஷ், ராஜேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story