முன்விரோதம்: லாரி உரிமையாளரின் மண்டை உடைப்பு

முன்விரோதம்: லாரி உரிமையாளரின் மண்டை உடைப்பு

முன்விரோதம் காரணமாக லாரி உரிமையாளரின் மண்டை உடைத்த இரண்டு பேரை கீழ்கொடுங்காலூர் போலீசார் கைது செய்தனர். 

முன்விரோதம் காரணமாக லாரி உரிமையாளரின் மண்டை உடைத்த இரண்டு பேரை கீழ்கொடுங்காலூர் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இரும்பேடு பகுதியை சேர்ந்தவர் ருத்ரகுமார் லாரி உரிமையாளர், இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் லாரி டிரைவருக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டது. பின்னர் கடந்த 1ம் தேதி கோயில் அருகே நின்றிருந்த ருத்ரகுமாரிடம் ,செல்வம் அவரது தம்பி கணபதி, இவர்களுக்கு நண்பர் பழனி ஆகிய மூவரும் ருத்ர குமாரை தாக்கியதில் மண்டை உடைந்தது, இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக செங்கல் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ருத்ர குமார் தரப்பை சேர்ந்த தமிழ் செல்லன், மதன் ஆகியோர் கணபதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் கீழ் கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து செல்வம்,கணபதி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story