வீரகனூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

வீரகனூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

காவல்துறை விசாரணை


வீரகனூர் அருகே போலீசில் காதல் ஜோடி தஞ்சம்.
கெங்கவல்லி: வீரகனூர் அருகே பொன்னானி நகர் சொக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சரவணன் (26). திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாரி முத்து மகள் ஐஸ்வர்யா(19), ஐடிஐ படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது குறித்து ஐஸ்வர்யா பெற்றோருக்கு தெரிய வந்தவுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர் இதையறிந்த காதல் ஜோடி, கடந்த 21ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். நேற்று இருவரும் சார்வாய் பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர், காதல் கணவருடன் ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story