எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் !!!

எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் !!!
எஸ். பி அலுவலகம்
எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள வெ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா (வயது 19). இவர் விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் விழுப்புரம் அருகே புருஷானூர் கிராமத்தை சேர்ந்த முகேஷ் (24) என்பவரும் கடந்த ஒரு வருட மாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவரவே அவர்கள் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 20-ந் தேதியன்று திருநாவலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையறிந்த மதுமிதாவின் பெற்றோர், அவரையும், முகேசையும் தொடர்புகொண்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுமிதாவும், முகேசும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்து, தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

Tags

Next Story