வீடு புகுந்து மொபைல் போன் திருடியவர் கைது

வீடு புகுந்து மொபைல் போன் திருடியவர் கைது

கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீடு புகுந்து மொபைல் திருட்டில் ஈடுபட்ட முக்கிய திருடர்களை தட்டி தூக்கிய காவல்துறை.
காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆல்பர்ட், 52; விஜயகுமார், 63. கொத்தனார்கள். இருவரும், சுங்குவார்சத்திரம் அடுத்த சோகண்டியில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, இருவரும் தங்கியுள்ள வீட்டின் ஹாலில், மொபைல் போனை சார்ஜ் போட்டுவிட்டு துாங்கினர். ஆல்பர்ட் நள்ளிரவு எழுந்து பார்த்த போது, இரண்டு மொபைல் போனும் காணாமல் போயிருப்பதைக் கண்டார். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் அன்றிரவு ரோந்து சென்றபோது, ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ்காந்தி நினைவிடம் அருகே, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து, அவரிடம் நடத்திய சோதனையில், நான்கு மொபைல் போன் இருந்தது தெரிந்தது. விசாரணையில், நான்கு மொபைல் போன்களும் சுங்குவார்சத்திரம் போலீஸ் எல்லையில் திருடியது தெரிந்தது. இதையடுத்து, அங்குவந்த சுங்குவார்சத்திரம் போலீசார், ஆவடி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், 22, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story