உரத்திற்கு பணம் கேட்ட தொழிலாளியை தாக்கியவர் கைது

உரத்திற்கு பணம் கேட்ட தொழிலாளியை தாக்கியவர் கைது

காவல் நிலையம் 

வேதாரண்யம் வாய்மேடு அருகே கடனாக கொடுத்த உரத்திற்கு பணம் கேட்ட தொழிலாளியை கோடாரியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரணியம் அடுத்த வாய்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மருதூர் தெற்கு ஆண்டான் காடு பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் மகன் செல்வம் வயது 40 .இவர் மருதூர் தெற்கு பகுதியில் உள்ள உரக்கடையில் வேலை பார்த்து வருகிறார் இந்த நிலையில் மருதூர் தெற்கு பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் அண்ணாதுரை வயது 47 என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 1400 ரூபாய்க்கு கடனாக உரம் வாங்கி சென்றுள்ளார் இந்த நிலையில் உரத்திற்கான பணத்தினை அண்ணாதுரை கொடுக்கவில்லை என தெரிகிறது இந்த நிலையில் ஜனவரி 29 திங்கட்கிழமை மதியம் 2:30 மணி அளவில் உரக்கடைக்கு வந்த அண்ணாதுரையிடம் செல்வம் பணம் கேட்டுள்ளார் அதற்கு அண்ணாதுரை பணத்தை ஏற்கனவே கொடுத்து விட்டதாக கூறியுள்ளார் அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் வந்த அண்ணாதுரை செல்வத்தை ஆபாசமாக திட்டி கை கோடாரியால் தாக்கியுள்ளார் இது தொடர்பாக செல்வம் வாய்மேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அண்ணாதுரை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

Tags

Next Story