மணலுார்பேட்டை அருகே ஊராட்சித் தலைவரை தாக்கியவர் கைது

மணலுார்பேட்டை அருகே ஊராட்சித் தலைவரை தாக்கியவர் கைது

காவல் நிலையம் 

மணலுார்பேட்டை அடுத்த கழுமரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 35; ஊராட்சி தலைவர். இவர், நேற்று காலை அரசு நடுநிலைப்பள்ளி அருகே கழிவு நீர் கால்வாயை சீரமைத்துக் கொண்டிருந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவராஜ், 36; அவரது மனைவி நர்மதா, 26;ஆகியோர் எங்கள் இடத்தில் எதற்காக சுத்தம் செய்கிறீர்கள் என கேட்டு திட்டி ராமச்சந்திரனை தாக்கினர்.இது குறித்த புகாரின் பேரில் சிவராஜ், நர்மதா மீது மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சிவராஜை கைது செய்தனர்.

Tags

Next Story