மெக்கானிக்கை தாக்கியவர் கைது

மெக்கானிக்கை தாக்கியவர் கைது

பைல் படம் 

தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மெக்கானிக் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் கிராமம் ரீட்டா நகரை சேர்ந்த மாசிலாமணி மகன் எழிலரசன், 35; மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் தியாகதுருகம் அண்ணா நகரில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரிடம் தியாகதுருகம் பாண்டியன் நகரை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன்,37; என்பவர் தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க கொடுத்திருந்தார். அதனை சரி செய்து தருவதில் காலதாமதம் ஆனதால் முருகனும் அவரது மகன் பிரதாப், 18; ஆகியோரும் சேர்ந்து எழிலரசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து எழிலரசனின் அண்ணன் செல்வம் கொடுத்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.

Tags

Next Story