பெண்ணை ஆபாசமாக திட்டியவர் கைது

பெண்ணை ஆபாசமாக திட்டியவர் கைது

காவல் நிலையம் 

வேதாரண்யம் வாய்மேடு அருகே இடப்பிரச்சனையில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பெண்ணை ஆபாசமாக திட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த வாய்மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சநதிகுளம் கிழக்கு கட்டளை தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி தெய்வானை வயது 40 .இதுபோல் அதே தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமன் வயது 48. தெய்வானை குடும்பத்திற்கும் ராமன் குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக இட பிரச்சினை ஏற்பட்டு அதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு 8 மணி அளவில் தெய்வானை தனது மகளுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார் அப்போது அங்கு வந்த ராமன் தெய்வானையிடம் தகராறு செய்து அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார் இது தொடர்பாக தெய்வானை வாய்மேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமனை கைது செய்தனர்

Tags

Next Story