வீட்டை காலி செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வீட்டை காலி செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

காவல் நிலையம் 

கள்ளக்குறிச்சியில் வீட்டை காலி செய்ய மறுத்து வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு, 35; இவரது தந்தை தங்கராசு கடந்த 2015 ம் ஆண்டு கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த சோலையப்பன் என்பவரிடம் காலிமனை மற்றும் மெத்தை வீட்டினை கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்றார். இதையடுத்து அதில் குடியிருந்த சோலையப்பனின் மகன் செல்வகுமார்,51; என்பரிடம் வீட்டை காலி செய்யும்படி அன்பரசு கூறியுள்ளார். ஆனால் வீட்டை காலி செய்ய முடியாது என்று கூறி அன்பரசுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தனர்.

Tags

Next Story