பெட்ரோல் பங்கில் கையாடல் செய்தவர் கைது

பெட்ரோல் பங்கில் கையாடல் செய்தவர் கைது

மோசடி நடந்த பெட்ரோல் பங்க்

திருத்துறைப்பூண்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ.42.21 லட்சத்தை கையாடல் செய்த வழக்கில் பெட்ரோல் பங்கின் முன்னாள் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் கருணாநிதி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்கரன் புலம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கடந்த 2014 முதல் 2017 வரை மேலாளராக பணியாற்றியுள்ளார் . அப்போது அவர் சுமார் 42 லட்சத்து 21,607 ரூபாய் ரொக்க பணத்தை கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட கருணாநிதி எஸ் பி அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட கார்த்தியை அதிரடியாக கைது செய்தனர்

Tags

Next Story