காதலிக்க கூறி சிறுமியை மிரட்டியவர் கைது

காதலிக்க கூறி சிறுமியை மிரட்டியவர் கைது

பார்த்திபன்

காதலிக்க கூறி சிறுமியை மிரட்டியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவரின் தங்கையான, 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் வாட்ஸ்ஆப்பில் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு பேசிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை காதலிக்க கூறி பார்த்திபன் வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் காதலிக்க மறுத்தால், தன்னிடம் உள்ள புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து அச்சிறுமி கடந்த 27 ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து கிருஷ்ணகிரி சென்று பார்த்திபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story