ஊராட்சி செயலாளரை மிரட்டியவர் கைது

ஊராட்சி செயலாளரை மிரட்டியவர் கைது

காவல் நிலையம் 

நெல்லை அருகே தோட்டாக்குடியில் ஊராட்சி செயலாளரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் தோட்டாக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற சாலமோன் (20) அங்கிருந்த ஊராட்சி செயலாளர் முத்துச்செல்வியிடம் தனது அம்மாவின் சம்பளத்தை தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டு முத்துச்செல்வியை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். இதுகுறித்து முத்துசெல்வி அளித்த புகாரின் அடிப்படையில் மூன்றடைப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு நேற்று (ஏப்.28) சாலமோனை கைது செய்தனர்.

Tags

Next Story