பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவருக்கு சிறை!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவருக்கு  சிறை!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவருக்கு சிறை

ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணிடம் நகையைப் பறிக்க முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நாரைக்கிணறு பகுதியைச் சோ்ந்த தம்பதி பாலாமணி (44) - மைதிலி (40). இவா்கள் 2020ஆம் ஆண்டு பிப். 6ஆம் தேதி ஓட்டப்பிடாரத்திலிருந்து தங்களது ஊருக்கு பைக்கில் சென்றனா். புளியம்பட்டி அருகே, மைதிலி அணிந்திருந்த சங்கிலியை மா்ம நபா் பறிக்க முயன்றாராம். சுதாரித்துக்கொண்ட மைதிலி சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டதால், அந்த நபா் தப்பியோடி விட்டாராம். புகாரின் பேரில் நாரைக்கிணறு போலீசார் வழக்குப் பதிந்து, ஓட்டப்பிடாரம் அருகே கோபாலபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் தா்மா் என்ற பாலசுப்பிரமணியனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை மாவட்ட உரிமையியல் - குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயந்தி விசாரித்து, பாலசுப்பிரமணியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் முருகேசன் ஆஜரானார்.

Tags

Next Story