புதிய நீதிக்கட்சி சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி !!

புதிய நீதிக்கட்சி சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி !!

 மாரத்தான் போட்டி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய நீதிக்கட்சி சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய நீதிக்கட்சி சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் முன்பு புதிய நீதிக்கட்சி சார்பில் போதை பொருட்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, அக்கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். வாணியம்பாடி நகராட்சியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி , ஜின்னா ரோடு, கச்சேரி சாலை ஆகிய வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. மேலும் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. அதே போல் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு பொருட்களை ஏ.சி.சண்முகம் மற்றும் அக்கட்சியினர் வழங்கினர்.

Tags

Next Story