மனைவி கண்டித்ததால் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை!

மனைவி கண்டித்ததால் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை!

தற்கொலை

தூத்துக்குடியில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 
தூத்துக்குடியில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி பிரையன்ட் நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ஜான்சன் (56), கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மது குடித்துவிட்டு வருவாராம். இதனை அவரது மனைவி மாரித்தாய் கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த ஜான்சன் நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story