தேசிய கொடி ஏற்றிய மாநகராட்சி மேயர்

தேசிய கொடி ஏற்றிய மாநகராட்சி மேயர்

குடியரசு தினம் 

நெல்லை மாநகராட்சி வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாநகராட்சி மேயர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாட்டின் 75-வது குடியரசு தின விழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த குடியரசு தின விழாவினை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி வளாகத்தில் மாநகராட்சி மேயர் சரவணன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ராஜு, மாமன்ற உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story