8,612 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கிய அமைச்சர்

8,612 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கிய அமைச்சர்

மாணவர்களுடன் அமைச்சர் சிவசங்கர் 

குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 8,612 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் மிக முக்கிய வினா-விடைகள் அடங்கிய புத்தகங்களை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், மிக முக்கிய வினா-விடைகள் அடங்கிய புத்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில் நன்னை, ஆடுதுறை மற்றும் ஒகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் தனது சொந்த செலவில் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் 8,612 மாணவ மாணவிகளுக்கும் ”தேர்வை வெல்வோம்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான மிக முக்கிய வினா விடைகள் அடங்கிய புத்தகங்களை வழங்கினார். இந்தப் புத்தகங்கள் கல்வித் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மற்றும் அரசுப் பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த அரியலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கட்ட ஆய்வுக்குப்பின் மாணவ மாணவிகள் எளிதில் படிக்கும் வகையில், தேர்வில் கட்டாயம் கேட்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வினாக்கள் அதற்கான விடைகளுடன் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களை வழங்கிய போக்குவரத்துத்துறை அமைச்சர் மாணவ மாணவிகளிடையே பேசிய போது, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத திட்டம். குன்னம் தொகுதயின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், எனது தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வினை எளிதில் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ”தேர்வை எதிர்கொள்வோம்” என்ற புத்தகம் வழங்கப்படுகின்றது.

மாணவ மாணவிகள் நன்கு படித்து, எதிர்காலத்தில் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக, உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கும் நேர்மையானவர்களாக உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கு இந்தப் புத்தகம் உங்கள் பள்ளிக்கல்வியின் பாதையில் எளிதில் பயணம் செய்ய உறுதுணையாக இருக்கும். என தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் . முத்தமிழ்ச்செல்வி மதியழகன், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story