பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்

மக்களுடன் அமைச்சர் பயணம் 

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இரண்டு பகுதிகளில் பேருந்து வழித்தடங்களை நீட்டிப்பு செய்து பேருந்தை தொடங்கிவைத்து அமைச்சர் சிவசங்கர்,மக்களுடன் பயணம் செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்துத்துறையின் சார்பில் இரண்டு பகுதிகளில் பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் பேருந்தை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் அயினாபுரம் மற்றும் அனைப்பாடி கிராம, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் அரியலூர் மற்றும் கொளக்காநத்தம் செல்வதற்கு தினசரி 6 நடைகள் கூடுதல் பேருந்து சேவையினை துவக்கி வைத்தும், பெரம்பலூரிலிருந்து சில்லக்குடி வரை செல்லும் நகரபேருந்தினை காரைப்பாடி வரையும் நீட்டிப்பு செய்தும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேருந்து சேவையினை தொடங்கி வைத்து வைத்து, மக்களோடு பேருந்தில பயணம் செய்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் மேலாண் இயக்குநர் மகேந்திரகுமார், பொது மேலாளர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story