மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்

மாணவ,மாணவிகளுக்கு  சைக்கிள் வழங்கிய அமைச்சர்

மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் 

தூத்துக்குடி தங்கம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் சைக்கிள் வழங்கினார்.
தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் பள்ளி தாளாளர் ஜீவன் ஜேக்கப், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், பெரியசாமி அறக்கட்டளை நிர்வாகிகள் சுதாசுதன், டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story