ராசிபுரம் ஒன்றியத்தில் வகுப்பறை கட்டடங்கள் - அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

ராசிபுரம் ஒன்றியத்தில் வகுப்பறை கட்டடங்கள் - அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

ராசிபுரம் ஒன்றியத்தில் வகுப்பறை கட்டடங்கள் - அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

ராசிபுரத்தில் வகுப்பறை கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மோளப்பாளையம் ஊராட்சி, பழனியப்பனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் ரூ.38.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார்.

விழாவில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு ராசிபுரம் ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ரூ.38.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்களை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் ஒன்றியக்குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் எஸ்.சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story