மேலவாசலில் கட்டுமான பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

மேலவாசலில் கட்டுமான பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

மேலவாசலில் ரூ.201.24 லட்சம் மதிப்பிலான கட்டுமான பணிகளை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரைக்கோட்டத்தின் மூலம் அயோத்திதாச பண்டிதர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மேலவாசல் திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (480+544) அடுக்குமாடி குடியிருப்புகளின் (மூன்று மாடி) பழுது மற்றும் மராமத்து பணிகள் ரூ.201.24லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 480 குடியிருப்புகளுக்கு தண்ணீர் வசதி,பூங்கா, குடியிருப்புகளுக்கு இடையே CC Pavement மற்றும் கழிவுநீர் ஓடை சீரமைப்பு போன்ற பழுது மற்றும் மராமத்து பணிகள் ரூ.82.47 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேலும், 544 குடியிருப்புகளுக்கான சீரமைப்பு பணிகள் ரூ.118.77 லட்சம் மதிப்பிட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அயோத்திதாச பண்டிதர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கும் பழுது மற்றும் மராமத்து பணிகளை துவக்கி வைத்துள்ளார்.

Tags

Next Story