நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்
நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்
விருதுநகரில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை அமைச்சர் கேகேஎஸ் ஆர் ராமசந்திரன் திறந்து வைத்தார்.

தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில்பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதனை முன்னட்டு தமிழகம் முழுவதும அனைத்து கட்சிகள் மற்றும் சார்பாகவும் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர், மோர் பந்தல் அமைத்து அவைகளை பொதுமக்களுக்கு வழங்கி சேவை செய்து வருகின்றனர்.

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வடக்கு மாவட்ட திமுக ந தர கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் ,மோர் பந்தல் துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நீர் மோர் பந்தலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ் . ஆர்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர், தண்ணீர்,தர்ப்பூசணி போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், நகரதலைவர் S.R.S.தனபால், யூனியன் சேர்மன் மாதவன் மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story